Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
விபச்சார பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தீ வைத்து எரிக்க முயற்சித்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை அசோக் நகர் ராகவன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் தீக்காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதாக அக்கம்பக்க குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த குமரன் நகர் போலீசார் வாலிபரை மீட்டு முதலுதவி அளித்தனர். விசாரணையில் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டு தி.நகரில் துணி வியாபாரம் செய்து வரும் தீபக் , அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தது தெரியவந்தது.

Category

🗞
News

Recommended