Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
‘‘ஒருநாள் நடுராத்திரி... வீட்டுல தூங்கிக்கிட்டு இருந்தேன். தெரு நாய்ங்க பயங்கரமா ஊளையிட்டுச்சுங்க. சத்தம் அதிகமாயிட்டே போச்சு. ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தேன். வெள்ளையா ஒரு பெரிய உருவம் அந்த பங்களாவுக்குள்ள போச்சு. அதிர்ச்சியில உறைஞ் சுட்டேன். அலறியடிச்சுக்கிட்டு படுக்கையில விழுந்த நான், ரெண்டு நாளா எந்திரிக்கவே இல்லை. அதுக்கப்புறம் இடியே விழுந்தாலும் சரி, ராத்திரி நேரத்துல அந்த பங்களா பக்கம் எட்டிப் பார்க்குறதே இல்லை. நான் மட்டுமில்லை... இந்தத் தெருவுல யாருமே ராத்திரி நேரத்துல கதவைத் திறக்குறது இல்லை’’ - திகிலூட்டுவதாக விவரித்தார் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தெற்குவீதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

Reporter - கே.குணசீலன்
Photos - ம.அரவிந்த்

Category

🗞
News

Recommended