Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/28/2019
#kasthuri #pubertydeaths #traditionalrituals

தமிழ்ச்சமுதாயத்தில் இப்படி ஒரு வழக்கம் தொன்று தொட்டு பேணப்பட்டு வந்திருக்கிறது. இன்றைக்கு மெத்தப்படித்த குடும்பங்களிலும், குறைந்தபட்சக் கல்வியறிவாவது பெற்றிருக்கக் கூடிய குடும்பங்களிலும் இதன் கடுமை சற்று தகர்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னும் கிராமப்புறங்களில் இது முற்றிலுமாக புழக்கத்தில் இல்லையென்றாகவில்லை.

பெண் குழந்தைகள் 11 லிருந்து 13 அல்லது 14 வயதிற்குள் பூப்படைவது இயல்பான ஆரோக்யமென்று கருதப்படுகிறது. அப்படி பூப்படையும் சிறுமிகளை வீட்டில் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து தனித்து அமர வைத்து வெல்லம் தட்டிப் போட்டு நல்லெண்ணெய் விரவிச் செய்த உளுத்தங்களி உண்ணத்தருவார்கள். தாய்மாமன் வரும் வரை ஆடை மாற்றுவதில்லை. அந்தியில் ஊரழைத்து தாய்மாமன் கையால் தலைக்குத் தண்ணீர் விட்டு மாமன்சீர் உடுத்தி அவர் கையால் கட்டப்பட்ட பச்சை ஓலைக் கிடுகுத் தட்டிக்குள் மறைத்து உட்கார வைக்கப்படுவார்கள். இது கடுமையாகப் பின்பற்றப்பட்ட காலமென்றால் அது பாரதிராஜா வின் மண்வாசனைக் காலமாக இருக்குமென்று தானே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது பொய்.

பின்னணிக்குரல்: கார்த்திகா வாசுதேவன்

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Category

🗞
News

Recommended