Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/24/2018
சென்னையில் ரத்த பரிசோதனை மையத்திற்கு பணிக்கு சென்ற செவிலியர் யமுனா ஆசைக்கு இணங்க மறுத்ததால் உரிமையாளர் ஆசிட் வீசியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உரிமையாளர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த ரத்தப் பரிசோதனை மையத்தில் 30 வயது யமுனா என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ரத்தப்பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா யமுனாவை பணிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

Category

🗞
News

Recommended